யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்றனர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்குபற்றிய இப்போட்டிகள் கடந்த 23.07.2011 அன்று ஜிம்றாசியம் மண்டபத்தில் இடம்பெற்றன. இதில் யாழ் பல்கலைக்கழகம் 1 தங்கப்பதக்கம் 2 வெள்ளிப்பதக்கங்கள் 1 வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது. இரண்டாம் வருட மாணவன் கஜேந்திரன் தங்கப்பதக்கத்தையும் மூன்றாம் வருட மாணவன் இராஜ்குமார் மற்றும் இறுதி வருட மாணவன் ஜெயராஜ் வெள்ளிப்பதக்கத்தையும் மூன்றாம் வருட மாணவன் நவநீதன் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர். பல்கலைக்கழக மட்டத்தில் யாழ். பல்கலைக்கழகம் ஜந்தாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இப்போட்டியில் முதல் முறையாக மாணவி ஒருவரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பதக்கங்களை வென்றெடுத்தனர்
5:52 AM |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment