உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் மாதம் 14ம் திகதி அனுஸ்ரிக்கப்படுகிறது. சாள்ஸ் பெஸட் உடன் இணைந்து புpரட்டிக் பான்ரிங் இன்சுலினைக் கண்டறிந்தனர். இத் தினத்தை நினைவு கோரும் முகமாக புpரட்டிக் பான்ரிங்கின் பிறந்த தினத்தில் உலக நீரிழிவு நோய் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2011 ம் ஆண்டு உலக நீரிழிவு நோய் தினம் நீரிழிவு நோய் பற்றிய கல்வி மற்றும் விழிப்புணர்வை மையப்படுத்தியுள்ளது. நீரிழிவு நோய் எனப்படுவது இன்சுலின் ஓமோன் உற்பத்தி குறைவடைவதால் இன்சுலின் ஓமோனுக்கான தடை அதிகரிப்பதால் உடலில் இன்சுலின் ஓமோன் செயற்படுவதற்கான ஆற்றல் குறைவடைகிறது. இக் குறைபாடானது நீரிழிவு நோய் எனப்படுகிறது;.
குருதியில் அதிக வெல்லநிலை உடல் உறுப்புக்களைச் சிதைவடையச் செய்வதால் உயிர் அச்சுறுத்தும் சிக்கல்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும். இதனால் இந்நோய் அமைதியான கொலையாளி எனவும் அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் வேறு பாதிப்புக்களிற்கும் உள்ளாகின்றனர். நீரிழிவுநோயாளிகளில் 20மூ ஆனோர் சிறுநீரக நோயாலும் ஒவ்வொரு வருடமும் 2.5 மில்லியன் நோயாளிகள் பார்வைக் குறைபாட்டிற்கும் ஆளாகின்றனர். அத்தோடு வருடாந்தம் 1 மில்லியன் நோயாளிகள் அபயவங்களை இழக்கின்றனர்.
தாக்கம் நகர்ப் புறத்தில் 16.4 வீதமாகவும் கிராமப் புறத்தில் 8.7 வீதமாகவும் காணப்படுகிறது. அத்தோடு நாள் ஒன்றுக்கு 100 நபர் இருதய மற்றும் நீரிழிவு நோயால் இறக்கின்றனர்.
வயது,பால் வேறுபாடின்றித் தாக்கும் இந்நோய் விரைவான நகர மயமாக்கல்,ஆரோக்கியமற்ற வாழ்கை முறை, மன அழுத்தம், அதிக உடல் நிறை, புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் விரைவில் பரவிவருகிறது.
சீனி, சக்கரை, தேன், வெல்லப்பாகு, கோதுமை மா அடங்கிய உணவு அரிசி மா அடங்கிய உணவு கொழுப்பு அடங்கிய உணவு என்பன உட்கொள்வதை தவிர்ப்பது அவசியம்.
மனஅழுத்தம் காரணமாகவும் இந்நோய் ஏற்படுவதால் இதற்கான தீர்வையும் பெற்றுக் கொள்வது அவசியம். பிரச்சனையை உறவினருடனோ அல்லது நண்பருடனோ பகிர்ந்து கொள்ளல் யோகாசனத்தில் ஈடுபடல் அத்தோடு முக்கியமானது எப்போதும் மகிழ்ச்சியாக இருத்தல் போன்றன மூலம் நீரிழிவு நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியும்.