யாழ்.எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

வடமாகாண பாடசாலைகளுக்கிடையான மெய்வல்லுனர் போட்டி அண்மையில் வவுனியா கல்வியற்கல்லுரியில்  இடம்பெற்றது. இதில் யாழ்.எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்கள் இரு தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இதில் 11 வயதுப்பிரிவு நீளம் பாய்தலில் ஜே.ஜெனிற்றா தங்கப்பதக்கத்தையும் சிறந்த மைதான வீரன்கனைக்குரிய கேடயத்தையும் பெற்றுக் கொண்டார். 15 வயதுப்பிரிவு நீளம் பைதலில் ந.தர்சிகா வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். 17 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் க.தனுயன் தங்கப்பதக்கத்தையும் சிறந்த மைதான வீரனுக்குரிய கேடயத்தையும் பற்றுக் கொண்டார். 19 வயதுப் பிரிவு அரை மரதன் போட்டியில் ஜே.மறிய கொறற்றி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

வெற்றி பெற்ற மாணவர்களையும் பாடசாலை அதிபர் ச. கமலதீபனையும் படம் காட்டுகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment