ஜனநாயக உலகில் மக்களிடையேயுள்ளதும் மக்கள் வெளிப்படுத்தும் தொடர்பு முறையே அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துக்காட்டுகின்றது. சமுகநிலைஇ அரசியல்நிலை பொருளாதார நிலை என்பவற்றையுட்படுத்தி பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள்,சினிமா, இணையம் போன்றன செயற்படுகின்றன.
இவ்வூடகங்களோடு ஒவ்வொரு தனிமனிமனிதனும் ஏதோ ஒரு தொடர்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கின்றான். கணத்திற்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் உலகின் போக்கிற்கு இவை மக்களை ஈர்த்துச் செல்கின்றன. இவற்றோடு இணைந்திருப்பதன் காரணமாக அறிந்தோ அறியாமலோ அவற்றோடு இசைவாகிக் கொள்கின்றோம். இதனால் அனேகமானவர்களின் வாழ்க்கைப்பயணத்தில் ஊடகம் தாக்கத்தை ஏற்படுத்திக் கெண்டேயிருக்கின்றது.
பல்வேறு வகைப்பட்ட ஊடகங்களோடும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதால் மக்களிடையே ஆரோக்கியமான விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனாலும் பாதங்களும் ஏற்படாது விடவில்லை. தனியேயுள்ள மனிதனையும் உலகோடு தொடர்புபடுத்தி விடுகிறது இணையம். இது பல்லூடகங்களையும் உட்படுத்தியுள்ளது. இத் தனித்துவமான ஊடகவியல்தான் 'தொடரறா ஊடகவியல்' எனப்படுகிறது. தொடர்பாடல் துறையில் பெரும் புரட்சியை ஏற்ப்படுத்திய இணையம் ஊடகவியலின் பல வடிவங்களையும் ஒன்றாக இணைத்துவிட்டது. வேறொருவர் வெளியிடும் கருத்துக்களை பார்ப்பவர்களாக இருந்த பொதுமக்கள் இதன்முலம் செய்திகளை வெளியிடுபவராக மாறியுள்ளனர். எடுத்துக்காட்டாக 2004 டிசம்பரில் இலங்கையை சுனாமி தாக்கிய போது தம்மிடங்களில் நடக்கும் சம்பவங்களையும் படங்களையும் ஒலிப்பதிவுகளையும் திரட்டி அனுப்பியிருந்தனர். இதற்கும் மேலாக குறும்படங்கள்இ இசை வெளியீடுகள் போன்றனவும் அதிகரித்துள்ளன. வலைப்பூக்களின் பாவனையால் கட்டுரைகள் இ கவிதைகள் எழுதுபவர்களும் வாசகர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். அனேகமானவர்களுக்கு வேலைப்பழு காரணமாக நண்பர்களுடனும் உறவினர்களுடனும் ஏனையவர்களுடனும் தொடர்பினை ஏற்படுத்தி கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால் சமுக வலைத்தளங்களின் வருகை முலம் இந்நிலை மாறியுள்ளது. மாறாக இதன் பாவனையால் தற்கொலை இளம்வயதுக்காதல்; போன்றன ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கின்றமை கவலைக்குரியதாகவேயுள்ளது.
மக்களை வெகுவாக சென்றடைந்துவிடும் ஊடகம் தான் தொலைக்காட்சி. அனேகமான தொலைக்காட்சிகள் தொடர்நாடங்களை மையப்படுத்தியே அமைகின்றன. அண்மைக்காலமாக சிறந்த நட்பை இளமைக்காலத்திலிருந்து எடுத்துக்காட்டும் 'சிந்து பைரவி' எனும் தொலைக்காட்சி நாடகம் பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் ஈர்த்துள்ளது. ஆனாலும் இவை உறவுகளிடையே ஏற்ப்படும் பிணக்குகளையும் பழிவாங்கும் உணர்வுகளையும் விசாலித்துக் காட்டிவிடுகின்றன. இவை சமுகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்ப்படுத்தி விடுகின்றன.
இலத்திரனியல் ஊடகத்தின் ஆரம்பமாய் உருவாகிய வானொலி மக்களது தொடர்புசாதனத்தில் முதன்மை பெறுகிறது. வானொலிகளில் நிகழ்த்தப்படும் போட்டிநிகழ்சிகள் மக்களைக் கவர்ந்துவிடுகிறது. 'ஒரு நிமிடம் பேசு ஒரு லட்சம் காசு' போன்ற நிகழ்ச்சிகள் சுவாரசியத்தையும் சுறுசுறுப்பையும் ஏற்ப்படுத்துகின்றது. தம் குரலிலேயே சொந்தக் கவிதைகளைப்படைக்க வழி சமைக்கின்றன 'கவிராத்திரி' போன்ற வானலை நிகழ்சிகள். இவை மக்களின் படைப்பாற்றலை வளர்க்கின்றன.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டியிழுத்து வைத்திருக்கின்றது சினிமா. நியத்தில் பெறமுடியாத எண்ணங்களையும் கற்ப்பனைகளையும் நம் கண்முன் காட்டிவிடுவதால் இவற்றின் பக்கம் ஈர்க்கப்பட்டுவிடுகின்றோம். பல அத்தமுள்ள திரைப்படங்கள் சமுகத்திடையே பல்வேறு மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. அவ்வகையில் அப்பாஇ பிள்ளை உறவை அழகாகக் காட்டும் படம் தான் 'அபியும் நானும்'. இப்படத்தினைப்பார்த்து தம்மை மாற்றிக் கொண்டவர்கள் ஏராளம். பெரிய பெரிய கடைகளில் வேலைக்காய் செல்பவர்கள் முதலாளிகளால் நடத்தப்படும் விதத்தை முழுமையாய் எடுத்துக்காட்டிய படம் தான் 'அங்காடித்தெரு'. இதன் பிறகு தான் அனேகமானவரை இப்பிரச்சனை சென்றடைந்தது. ஆனாலும் சமுகத்தைத்தீயவழியிலும் செலுத்த மறுக்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இளம் வயதுத்திருமணம்இ இளம் வயதுக்கற்ப்பம்,கொலைஇ கொள்ளைஇ கொஸ்ரி மோதல்களஇ; விவாகரத்துஇ கலாச்சார சீர்கேடு இவையாவும் சினிமாவின் தாக்கம் தான். சில படங்கள் எதார்த்தத்தைத் தந்த போதும் அனேகமான தமிழ் சினிமா மக்களைத்தவறான பாதைக்கேயிடுட்டுச்செல்கின்றது.
மக்கள் ஊடகங்களின் ஆரம்ப கட்டமாய் உருவாகிய செய்திப்பத்திரிகைகள் பல்வேறு வகையான ஊடகங்கள் உருவாகிய போதிலும் சமுகத்தின் வளர்ச்சிப்போக்கில் மாற்றத்தை ஏற்ப்படுத்தியதால் தான் இன்றும் நிலைத்துநிற்கின்றன. காலையில் பத்திரிகை பார்க்காதிருப்பவர்கள் மிகக்குறைவு. பாமர மக்களும் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளக்கூடியதாய் அனைவரையும் இவை சென்றடைகின்றன. இந்தபோதும் பத்திரிகைகள் பக்கச் சார்பாய்த் தொழிற்ப்படுவதால் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்துகின்றன.
மக்களின் ஒவ்வொரு அசைவிலும் பங்கு கொள்ளும் ஊடகம் சமுதாயத்தின் வளர்ச்சியை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுமாயின் உலகின் வெற்றிப்பாதையை இலகுவில் அடையமுடியும்.
ஊடகமும் மக்களும்
11:01 AM |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment