பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி இருவர் படுகாயம்

யாழ் நகரின் நாவக்குழிப் பாலத்திற்கு அருகில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரச பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்துடனேயே யாழ் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment