நடிப்பதற்காக சந்தர்ப்பம் எடுத்துத்தருவதாக ஒரு பெண்ணுக்கு வாக்களித்த படப்பிடிப்பாளர் அப்பெண்ணை நடிக்க வைத்துவிடுகிறார். வேடிக்கை என்னவென்றால் அவர் நடிக்கவைத்தது திரையில் அல்ல. நியத்தில்... வறுமையின் கொடுமையால் பணத்தைப்பெறுவதற்காக தான் இதைச் செய்கிறார் படப்பிடிப்பாளர். சஞ்சிகை ஒன்றிற்கு அப்பெண்ணின் படம் வேண்டுமென படம் எடுத்து மனதைக்குளிரவைத்துவிட்டு கடனாகப் பணத்தை வாங்கிச்சென்றுவிடுகிறார். ஆனால் கடைஅ சழடட இல்லாத கமராவில் தன்னைப்படம் பிடித்ததை அறிந்தும் அவரின் வறுமையை உணர்ந்து காட்டிக்கொடுக்காது விட்டுவிடுகிறாள். ஆனாலும் அவள் மட்டும் பணக்காரி என்று எண்ணிவிடாதீர்கள். இவளும் வறுமையின் பிடுயில் சிக்கியவள் தான்.
இவ் எதார்த்தமான குறும்திரைப்படம் பிரபஞ்சனின் கதையில் பாலுமகேந்திராவரல் இயக்கப்பட்டது.
இவ் எதார்த்தமான குறும்திரைப்படம் பிரபஞ்சனின் கதையில் பாலுமகேந்திராவரல் இயக்கப்பட்டது.
0 comments:
Post a Comment