யுத்த சூழல், வறுமை போன்றவற்றை மையப்படுத்தி வெளியாகும் குறும்படங்கறுக்கு மத்தியில் ''அவசரம் '' குறும்படம் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது.
அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் இளவயது காதலர்களின் நிலையைக் கருவாகக் கொண்டமைந்த படம் தான் இது. வழக்கமான சோகப்பாணியில்லாது மகிழ்ச்சியான பாதையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது கதை. எதார்த்தமான காட்சிகள், சாதாரண வார்த்தைப்பிரயோகங்கள் எல்லாமே பார்வையாளரை கதைக்குள் ஒன்றித்து வைத்துள்ளது.
தென்னிந்தியப்படங்களில் இல்லாத யாழ்ப்பாண மண் வாசனை படத்திற்கு கிடைத்த வெற்றி. புதுமுக நடிகர்கள். . இளவயதும் கூட. சிறிது தளர்ச்சிகள் இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டத்தான் வேண்டும். முன்னனுபவமில்லாது எடுத்துக் கொண்ட செயலை வெற்றிகரமாகவே முடித்துள்ளனர் படக்குழுவினர்.
கருவிற்கேற்ப்ப காட்சிகளைக் கூட்டியிருந்தால் படம் முழுமைபெற்றிருக்கும்.
அவசரம் - குறும்படம் ஒரு பார்வை...
4:44 AM |
Labels:
கண்களைத் தொட்டவை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment