முகவரியில்லாக் கடிதங்கள்...

என் பிஞ்சுக் கரங்களைப் பற்றிக் கொண்டு

வெகு துாரம் எனை அழைக்கிறாய்..
கனத்துப் போன இதயத்தை உன் 
அன்பு மொழியால் வருடிவிடுகிறாய்..
சிவந்த கன்னங்களை உன் 
முத்தங்களால் ஈரம் செய்கிறாய்..
குழந்தை போல எனை எண்ணி 
அழகாய் அலங்கரிக்கிறாய்..
உனக்கு எப்போதும் நான் குழந்தை தான்.

கண் திறக்கும் போது எல்லாமே
கனவாய்ப் போகிறதே
உறக்கத்தைத் தொலைத்து விட்டு
இரவுகளோடு போராடும் 
உன்னவளைக் காண வரமறுக்கிறாயே..

உனைத் தொலைத்து இன்றோடு
முன்று வருடங்கள் ..

நினைவுகள் மட்டும் போதுமா?

ஆசையின்றி ஓசையின்றி
வார்த்தையின்றி மௌனமின்றி
வேகமின்றி மோகமின்றி
காத்திருக்கிறேன்....

என் தவிப்புக்கள் எல்லாம் 
உனையடையாது போகிறதே
முகவரியில்லாக் கடிதங்களாய்...

உடலாலும் மனதாலும்
பத்து மாதம் 
எனைச் சுமந்தாய்
உனக்குப் புரியாதா 
உன்னவளின் உண்வுகள்..
இந்த நம்பிக்கையில்

உன் நினைவுகளோடு 
மெல்ல நகர்கிறது என் நாட்கள்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

pirai6 said...

nice indhu... keep it up....

இந்து ஒளி said...

நன்றி..

Arivamutam said...

Good verry good... ilam kavi inthu.... keep it up

இந்து ஒளி said...

Thanks a lot

Post a Comment